செய்திகள் இந்தியா
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
பெங்களூரு:
கர்நாடகம் மாநிலம் தும்கூரில் மார்கோனஹள்ளி அணை திடீரென திறக்கப்பட்டபோது அங்கு ஓடை நீரில் விளையாடிக் கொண்டிருந்த 6 பேர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
தும்கூரின் பிஜி பால்யா பகுதியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் மார்கோனஹள்ளி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்களில் குழந்தைகள் உள்பட 7 பேர் அணையின் ஓடையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அணையின் நீர்மட்டம் அதிகரித்து திறக்கப்பட்டதில் 7 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நவாஸ் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த மீதமுள்ள 4 பேரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
நீர் மட்டம் அதிகரிக்கும்போது மதகுகள் தானாக திறக்கும் தொழில்நுட்பம் அணையில் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 12:01 pm
‘பீம்’ பணப்பரிவா்த்தனை செயலி இந்தியாவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
