
செய்திகள் இந்தியா
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
பெங்களூரு:
கர்நாடகம் மாநிலம் தும்கூரில் மார்கோனஹள்ளி அணை திடீரென திறக்கப்பட்டபோது அங்கு ஓடை நீரில் விளையாடிக் கொண்டிருந்த 6 பேர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
தும்கூரின் பிஜி பால்யா பகுதியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் மார்கோனஹள்ளி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்களில் குழந்தைகள் உள்பட 7 பேர் அணையின் ஓடையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அணையின் நீர்மட்டம் அதிகரித்து திறக்கப்பட்டதில் 7 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நவாஸ் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த மீதமுள்ள 4 பேரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
நீர் மட்டம் அதிகரிக்கும்போது மதகுகள் தானாக திறக்கும் தொழில்நுட்பம் அணையில் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm