
செய்திகள் இந்தியா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர்: சநாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என கூக்குரல்
புது டெல்லி:
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது 71 வயதான வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீசினார்.
அப்போது, சநாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் முழக்கமிட்டார்.
எனினும் இந்த செயலுக்கு செவி சாய்க்காத தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை தொடர்ந்தார்.
அப்போது, "இதுபோன்ற சம்பவங்களால் கவனம் சிதற வேண்டாம். இது எங்களைப் பாதிக்கவில்லை. எங்களின் கவனமும் சிதறவில்லை' என்று தயக்கமுமின்றி கூறினார்.
ராகேஷ் கிஷோரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் மீது புகார் அளிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், ராகேஷுக்கு வழக்கறிஞர் சங்கம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவ உத்தரவிடக் கோரிய வழக்கை அண்மையில் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனு என்றும் இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் சைவ வழிபாட்டில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் கஜுராஹோவில் உள்ள பெரிய சிவலிங்கத்தை வழிபடுங்கள் எனத் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm