நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மது வழங்கும் நிகழ்வுகளுக்கு யார் பணம் செலுத்தினார்கள் என்ற தகவலை ஹோட்டல்கள் வெளியிட வேண்டும்: மாஸ் எர்மியாத்தி

கோலாலம்பூர்:

மது வழங்கும் நிகழ்வுகளுக்கு யார் பணம் செலுத்தினார்கள் என்ற தகவலை ஹோட்டல்கள் வெளியிட வேண்டும்.

மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் இதனை கூறினார்.

அனைத்துலக சுற்றுலா விருந்து விழா சன்வே ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த  நிகழ்வை யார் ஏற்பாடு செய்தார்கள் என்பதை சன்வே ஹோட்டல் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்.

அது சுற்றுலா அமைச்சா அல்லது மூன்று தொழில் சங்கங்களா என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும்.

மூன்று சுற்றுலா சங்கங்கள், தொழில்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மதுபானம் பரிமாறப்பட்ட ஒரு இரவு உணவை வழங்கியதாக வலியுறுத்தியது.

இது பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களைத் தூண்டியது.

அதனால் தான் நிறுவன நிர்வாகத்துடன் பட்டியலிடப்பட்ட குழுவான சன்வே ஹோட்டல் விழாவின் ஏற்பாட்டாளரின் தகவலை வெளியிட வேண்டும்.

மூன்றாவது தரப்பினரின் ஏற்பாடு என்றால், சுற்றுலா அமைச்சு எந்த உரிமைகோரல்களையும் கொண்டிருக்க முடியாது என்று அர்த்தம்.

மேலும் ஏதேனும் பணம் செலுத்தப்பட்டதா என்பதை நாங்கள் கண்காணிப்போம்.

நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது மாஸ் எர்மியாத்தி இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset