செய்திகள் மலேசியா
தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை: கல்வியமைச்சு
புத்ராஜெயா:
தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20, திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்படவுள்ளது.
இக்கொண்டாட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நல்ல செய்தியாக கல்வி அமைச்சு கூடுதல் விடுமுறையை அறிவித்துள்ளது.
2025/2026 அமர்வுக்கான கல்வி நாட்காட்டியின் குறிப்பின் அடிப்படையில், சரவா தவிர நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கூடுதல் விடுமுறை பொருந்தும்.
இதில் பள்ளி ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் தீபத் திருவிழாவைக் கொண்டாட வாய்ப்பளிக்கும்.
மேலும் ஏ பிரிவில் உள்ள கெடா, கிளந்தான், திரெங்கானுவில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 19 (ஞாயிற்றுக்கிழமை), அக்டோபர் 21 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும்.
பி பிரிவில் உள்ள மலாக்கா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான், கூட்டரசுப் பிரதேசம், புத்ராஜெயா ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 21, அக்டோபர் 22ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும்.
இதற்கிடையில் சரவாக்கில் அக்டோபர் 20 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டுமே விடுமுறை இருக்கும்.
இதன் மூலம், பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும் என கல்வியமைச்சின் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:50 pm
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
November 13, 2025, 5:45 pm
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
