நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா - பாகிஸ்தான் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

மலேசியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ஒத்துழைப்பை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும்.

மேலும் தீவிரமான, முற்போக்கான கொள்கைகளை நோக்கி நகர வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இரு நாடுகளுக்கும் நீண்ட வரலாறு இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் தேக்கமடைந்துள்ளன.ப்ஆக தெளிவான கொள்கைகளின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட நடைமுறை அணுகுமுறை தேவை.

நமது சொந்த உயிர்வாழ்விற்காக நாம் எழுந்து நின்று இந்த மிகவும் தீவிரமான கொள்கையில் இறங்க வேண்டிய நேரம் இது என்று பிரதமர் கூறினார்.

மலேசியா ஒரு வர்த்தக நாடு. தற்போதுள்ள வர்த்தக கூட்டாளிகளுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

ஆனால் புதிய வாய்ப்புகளையும் கண்டறிய விரும்புகிறோம்

மேலும் நாங்கள் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.

பாகிஸ்தான்-மலேசியா வணிக மற்றும் முதலீட்டு மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அதிகாரப்பூர்வ வருகையுடன் இணைந்து அன்வார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset