நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

FIFA குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்: ஹன்னா

கோலாலம்பூர்:

FIFA குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ இதனை கூறினார்.

மலேசிய கால்பந்து சங்கம்,  ஏழு ஹரிமாவ் மலாயா வீரர்களுக்கு எதிராக பிபா தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது நாட்டின் பிம்பத்தை பாதிக்கும் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளாகும்.

ஆக இது சம்பந்தமாக மலேசிய கால்பந்து சங்கம் உடனடியாக மேல்முறையீட்டு செயல்முறையைத் தொடங்க வேண்டும்.

குறிப்பாக அந்த முடிவுக்குப் பிறகு மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேற்று அக்டோபர் 6 தேதியிட்ட 'தீர்ப்புக்கான அடிப்படைகளை' நான் படித்தேன். அதை மிகவும் தீவிரமாகக் கருதுகிறேன்.

மேல்முறையீட்டு செயல்முறை இன்னும் முடிவடையாததால், எந்தவொரு சிறப்பு அறிக்கையும் வெளியிடப்படுவதற்கு முன்பு FAM இந்த மேல்முறையீட்டு செயல்முறையை முடிக்க வேண்டும்.

இன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தேசிய தடகள அணி திரும்பியதை வரவேற்ற பிறகு ஹன்னா இயோ சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset