செய்திகள் இந்தியா
உருது மொழி பயன்படுத்தியதற்காக சேனல்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்?
புது டெல்லி:
உருது மொழியை அதிகளவு பயன்படுத்தியது தொடர்பாக ஹிந்தி செய்தி சேனல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு அவசரமாக மறுத்துள்ளது.
'ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தி நிகழ்ச்சிகளில் அதிகளவு உருது மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி பார்வையாளர் புகார் அளித்துள்ளனர். உங்களின் நடவடிக்கை விதிமுறைகளை மீறிய செயலாக இது கருதப்படுகிறது' என ஹிந்தி சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து இந்திய பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு கூறுகையில், ஊடக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் ஹிந்தி ஊடக நிறுவனங்களில் ஒளிப்பரப்பான செய்திகள் தொடர்பாக பார்வையாளர் ஒருவர் அளித்த புகாரை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பியது மட்டுமே எங்களது பணி. இது, அமைச்சகத்தின் உத்தரவு அல்ல என தெளிவுபடுத்தியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
