செய்திகள் இந்தியா
கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு கேரள அரசும் தடை
திருவனந்தபுரம்:
மத்தியப் பிரதேசத்தில் சிந்த்வாரா மாவட்டத்தில் 11 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு கேரள அரசும் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக நடைபெற்ற ஆய்வில், குழந்தைகளின் சிறுநீரகத் திசுக்களில் டை எத்திலீன் கிளைசால் என்ற வேதிப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும். இவை பெரும்பாலும் பெயிண்ட், மை போன்ற பொருட்கள் தயாரிக்க இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இவை சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது..
இந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தின் ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருவதால் அங்கும் அதி்காரிகள் விசாரணை நடத்தி தொழிற்சாலையை மூடினர்.
இந்த மருந்து விநியோகத்துக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை விதித்தன.
தற்போது கேரள அரசும் தடை விதித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
