செய்திகள் இந்தியா
கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு கேரள அரசும் தடை
திருவனந்தபுரம்:
மத்தியப் பிரதேசத்தில் சிந்த்வாரா மாவட்டத்தில் 11 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு கேரள அரசும் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக நடைபெற்ற ஆய்வில், குழந்தைகளின் சிறுநீரகத் திசுக்களில் டை எத்திலீன் கிளைசால் என்ற வேதிப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும். இவை பெரும்பாலும் பெயிண்ட், மை போன்ற பொருட்கள் தயாரிக்க இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இவை சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது..
இந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தின் ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருவதால் அங்கும் அதி்காரிகள் விசாரணை நடத்தி தொழிற்சாலையை மூடினர்.
இந்த மருந்து விநியோகத்துக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை விதித்தன.
தற்போது கேரள அரசும் தடை விதித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
