நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தால் வசூலிக்கப்பட்ட 6.17 பில்லியன் ரிங்கிட் லெவி வரியில் 94% முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தால் வசூலிக்கப்பட்ட 6.17 பில்லியன் ரிங்கிட் லெவி வரியில் 94% முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.

நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்திற்காக 2023 முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை எச்ஆர்டி கோர்ப் மொத்தம் 6.17 பில்லியன்  ரிங்கிட் லெவி வரிகளை வெற்றிகரமாக வசூலித்துள்ளது.

இந்தத் தொகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் நான்கு மில்லியன் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க 5.77 பில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.

இது மொத்த தொகையில்  கிட்டத்தட்ட 94 சதவீதம் ஆகும்.

அரசாங்கம் எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது என்பதை மட்டுமே அறிவிக்கிறது.

ஆனால் எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதைக் கூறவில்லை என்று மக்கள் எப்போதும் கூறுகிறார்கள்.

உண்மையில், பயன்படுத்தப்படும் செலவுகளைப் தெரிவிப்பதிலும் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம்.

தலைநகரில் நடைபெற்று வரும் தேசிய மனிதவள மூலதன மாநாடு, கண்காட்சி 2025 இல் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

மொத்தத் தொகையில், 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிக்காக 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் இப்போது அதிகரித்து வரும் எதிர்கால வேலை சந்தையில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள இது இன்னும் போதுமானதாக இல்லை.

இது சம்பந்தமாக எச்ஆர்டி கோர்ப், மனிதவள அமைச்சு மலேசியர்கள் புதிய வேலை சந்தைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள உதவும் வகையில் இலவச படிப்புகள் உட்பட கூடுதல் படிப்புகள் மற்றும் பயிற்சி திட்டங்களை வழங்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்து தீவிரப்படுத்தும்.

எதிர்காலத்தின் முக்கியமான திறன்களை மலேசியர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் திறனை அதிகரிப்பதில் எங்கள் கவனம் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset