
செய்திகள் மலேசியா
முறையான ஏற்பாடுகள் இல்லாததால் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையின் சிறு வியாபாரிகள் பாதிப்பு: டத்தோ லோகபாலா
கோலாலம்பூர்:
முறையான ஏற்பாடுகள் இல்லாததால் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையின் சிறிய வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன.
பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இதனை கூறினார்.
இம்முறை பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி கடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா முக்கிய சாலையில் ஏன் கடைகளை அமைத்தனர் என்று எங்களுக்கு தெரியவில்லை.
ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கும் வேளையில் இந்த கடைகளால் மேலும் மிக மோசமான நெரிசல் ஏற்படும்.
உடல்பேறு குறைந்தவர்களுக்கு இம்முறை கடைகள் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.
மேலும் பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கு கடைகள் கொடுக்கப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.
உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்து மற்றவர்களுக்கு கடைகள் கொடுத்தது ஏன் என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.
கூட்டரசுப் பிரதேச முன்னாள் துணை அமைச்சர்களாக இருந்த டத்தோஸ்ரீ எம், சரவணன் அல்லது என்னையும் அழைத்து பேசி என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டு இருக்கலாம்.
அதையும் செய்யவில்லை. ஒரு பகுதி ரோட்டை அடைத்து கடைகளை அமைத்து கொடுத்துள்ளது முறையல்ல என்று அவர் சொன்னார்.
இன்னும் காலம் கடந்து விடவில்லை. அனைத்தையும் முறை படுத்துங்கள்.
முறையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏழு வாய்ப்பில்லை என்று அவர் சொன்னார்.
விடுபட்டு போனவர்களுக்கு கடைகளை ஏற்படுத்தி கொடுங்குகள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கடை விவகாரம் பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று களம் இறங்கினர்.
விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன், பிபிபி கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், சிகாம்பூட் தொகுதி தலைவர் டத்தோ டாக்டர் வினோத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2025, 1:19 pm
தீபாவளியின் போது தேர்வுகள்; இந்து மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது: கணபதிராவ்
October 7, 2025, 1:18 pm
பிரதமர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் அமர்வு இல்லை
October 7, 2025, 1:17 pm
கையெழுத்தில் உள்ள இரத்தம் ஷாரா கைரினாவின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது
October 7, 2025, 12:45 pm
கார்டெல் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் அரசாங்கம் சமரசம் செய்துகொள்ளாது: பிரதமர் அன்வார்
October 7, 2025, 12:28 pm
FIFA குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்: ஹன்னா
October 7, 2025, 10:02 am
மலேசியா - பாகிஸ்தான் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
October 7, 2025, 9:55 am
டிக்டாக், முகநூலில் மிரட்டல் விடுத்த 7 பேர் கைது: டத்தோ குமார்
October 7, 2025, 9:40 am