நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ மொஹைதின் யாசினை மலேசிய இந்திய மக்கள் கட்சி ஆதரிக்கிறது: புனிதன்

பெட்டாலிங்ஜெயா:

பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ மொஹைதின் யாசினை மலேசிய இந்திய மக்கள் கட்சி ஆதரிக்கிறது.

அக்கட்சியின் தலைவர் பி. புனிதன் இதனை தெரிவித்தார்.

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினை கட்சியின் விருப்பமான பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

அனைத்து இனத்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக அவர் விளங்குகிறார்.

அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பிரதிநிதிகள் தேசியக் கூட்டணியின் தலைவராக அவருக்கு முழு ஆதரவையும் வழங்க ஒப்புக் கொண்டனர்.

அபாவே எங்களின்  விருப்பம்.  நாட்டை வழிநடத்த அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

நாங்கள் அக்கறையுள்ள, சுத்தமான, நிலையான அரசாங்கத்தை விரும்புகிறோம். 

டான் ஸ்ரீ மொஹைதின் யாசின் பிஎன் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூட்டத்தில் தனது நிறைவு உரையில் கூறினார்.

கட்சி பிரதிநிதிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து தீர்மானங்களில் இந்த ஆதரவும் ஒன்றாகும்.

இந்த தீர்மானத்தில் கோவிட்-19 தொற்று காலத்தின் போது மொஹைதின் யாசீன் தலைமையைக் கட்சி கருத்தில் கொள்கிறது.

அந்த முக்கியமான காலகட்டத்தில் உயிர்களைக் காப்பாற்றவும் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லவும், பொருளாதார, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும், உயர்ந்த நேர்மை, தொலைநோக்குப் பார்வை கொண்ட அனுபவம் வாய்ந்த தலைவரின் தலைமையிலான அரசாங்கம் மலேசியாவிற்குத் தேவை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset