நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தோசா சட்டமன்ற தொகுதியின் வெள்ளப் பிரச்சினையை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்: குணராஜ்

கிள்ளான்:

செந்தோசா சட்டமன்ற தொகுதியின் வெள்ளப் பிரச்சினையை  தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் பண்டார் செந்தோசா சுற்று வட்டாரத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள்,  சட்டமன்றத்தின் சிறப்பு அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும் பொறியியல் துறை,  பொதுப் பணி  துறை, கிள்ளான் மாவட்டம், நில அலுவலகங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள,  மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புப் பணிகள் உட்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

சட்டவிரோத கட்டுமானம், வீட்டு வடிகால் அடுக்குகளை முழுமையாக மூடுதல், சட்டவிரோத கழிவுகளை அகற்றுதல் போன்ற வெள்ளப் பிரச்சினைக்கு பங்களிக்கும் பல தடைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுத்தம் செய்யும் செயல்முறையைத் தடுக்கும் மேற்கூறிய குற்றங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

அதே வேளையில் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை, குறிப்பாக முன் மற்றும் பின் பகுதிகளில் தூய்மையாகப் பராமரிக்க குடியிருப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

வடிகால்கள் அமைப்புகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் தடைகளை ஏற்படுத்த வேண்டாம்.

உடனடி கவனம் தேவைப்படும் பகுதிகள், சட்டவிரோத கழிவுகளை அகற்றுவது குறித்த வீடியோக்கள் இருந்தால், அவற்றை உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு குடியிருப்பாளர்களை தாம் கேட்டுக் கொள்வதாக குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset