செய்திகள் இந்தியா
5 ஆண்டுகளுக்கு பிறகு 26-ஆம் தேதி முதல் இந்தியா - சீனா நேரடி விமான சேவை
புது டெல்லி:
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா - சீனா நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 -ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
2020ம் ஆண்டு கொரோனா பரவலால் சீனாவுடனான விமான சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர் கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் இருநாடுகளுக்கும் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் இந்தியா, சீனாவுக்கு இடையேயான நட்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இம் மாத இறுதியில் சீனாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இதையடுத்து, மேற்குவங்கத்திலிருந்து வரும் 26ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் காங்க்சவ்வுக்கு முதல் விமானத்தை இயங்குவதாக அறிவித்தது. இதற்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
