செய்திகள் இந்தியா
வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை ஒன்றிய அரசு இன்னும் தரவில்லை: கேரள முதல்வர்
திருவனந்தபுரம்:
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கான ரூ.260 கோடி நிதியுதவியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என்று மாநில சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
வயநாட்டில் 2024 ஜூலை 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கும் மறுகட்டமைப்புக்கும் ரூ.2,221.10 கோடி வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, ரூ.260.65 கோடி நிதியுதவி வழங்க ஒன்றிய ஒப்புக் கொண்டது. எனினும், அந்த நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை.
வயநாடு நிலச்சரிவில் வீடிழந்தவர்களுக்காக 64 ஹெக்டேரில் புதிய நகரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரிக்குள் இத் திட்டம் நிறைவடையும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:39 pm
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
May 11, 2026, 11:02 am
திருமணத்துக்கு யாரும் தங்கம் வாங்கவேண்டாம்: இந்தியர்களுக்கு மோடி எச்சரிக்கை
May 8, 2026, 4:20 pm
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு
May 6, 2026, 5:29 pm
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
May 6, 2026, 12:44 pm
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம்: இந்தியா முதலிடம்
May 6, 2026, 11:03 am
ஊடுருவலைத் தடுக்க முதலைகளா?: எல்லைப் பாதுகாப்புப் படையின் யோசனையும் எழும் எதிர்ப்பும்
May 4, 2026, 4:01 pm
