செய்திகள் இந்தியா
ராகுல் காந்தியை சுடப்போவதாக மிரட்டல்: பாஜக நிர்வாகி மீது வழக்கு
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி பீரன்டு மகாதேவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மலையாள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய மகாதேவன், ராகுல் காந்தியின் மார்பில் தோட்டாக்கள் பாயும் என்றார்.
வங்கதேசம், நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய மகாதவேன், இந்தியாவில் அதுபோன்ற போராட்டங்கள் நடைபெற சாத்தியமில்லை. பெரும் போராட்டங்களை நிகழ்த்த ராகுல் எண்ணினால் அவரது மார்பில் தோட்டாக்கள் பாயும் என்றார்.
அவரது பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ப்ரிண்டு மகாதேவனுக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 10:17 am
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
April 12, 2026, 5:13 pm
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
