செய்திகள் இந்தியா
E ARRIVAL CARD - அக்டோபர் 1 முதல் இந்தியாவில் அமல்: OCI card வைத்திருப்பவர்களுக்கு விலக்கு
புது டெல்லி:
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பயண வருகை அட்டைகளை அக்டோபர் 1 முதல் இணையவழியிலேயே பூர்த்தி செய்து விடலாம் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,
இதனால் விமான நிலைய குடியேற்ற மையத்தில் பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும்.
மின்னணு வருகை அட்டையில் பாஸ்போர்ட் எண், தேசியம், வருகையின் நோக்கம், உள்ளூர் முகவரி, தொடர்புத் தகவல் போன்ற அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும். இதற்காக எந்த ஆவண பதிவேற்றங்களும் தேவையில்லை.
இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு இந்திய குடிமகன் (OCI) அட்டை வைத்திருப்பவர்கள் படிவத்தை நிரப்புவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் லக்னோ, திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு, அமிர்தசரஸ் ஆகிய ஐந்து விமான நிலையங்களில் ஃபாஸ்ட் டிராக் குடியேற்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்திய குடிமக்கள், OCI வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் முதலில் 2024 இல் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, கொச்சி, அஹ்மதாபாத் வரை நீட்டிக்கப்பட்டது.
மொத்தம் 13 விமான நிலையங்களில் இப்போது இந்த வசதியை வழங்கப்படுகிறது. இதனால் பயணிகள் இப்போது நீண்ட வரிசைகள் நிற்பது தடுக்கப்பட்டு, 30 வினாடிகளில் குடியேற்ற அனுமதியைப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபாஸ்ட் டிராக் குடியேற்ற திட்ட (FTI-TTP) போர்ட்டலில் சுமார் 3 லட்சம் பயணிகள் பதிவு செய்துள்ளனர், அதில் 2.65 லட்சம் பேர் பயணத்தின் போது இதைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
