செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் 8 இடங்களில் மின்சாரம் திருட்டு: ரூ.9.40 லட்சம் அபராதம்
சென்னை:
சென்னை கோட்டத்தில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.9.40 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்துக்கு உட்பட்ட சென்னை வடக்கு, சென்னை மையம், சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சோழிங்கநல்லூர் கோட்டம் சென்னை தெற்கு-2 மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 9-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மின் நுகர்வோருக்கு ரூ.9.01 லட்சம் இழப்பீட்டு தொகை விதிக்கப்பட்டது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து சமரசத் தொகை ரூ.39 ஆயிரம் செலுத்தியதால், காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான புகார்கள், தகவல்களை சென்னை அமலாக்க செயற்பொறியாளரிடம் 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்
October 24, 2025, 2:46 pm
தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் நாளை செயல்படும் என்று அறிவிப்பு
October 23, 2025, 7:49 pm
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் எதிர்பார்ப்பு
October 23, 2025, 4:52 pm
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
October 21, 2025, 12:48 pm
