செய்திகள் இந்தியா
இந்தியாவில் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி நேற்று முதல் அமல்
புது டெல்லி:
இந்தியாவில் குறைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நேற்று திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
சுமாா் 375 பொருள்கள் மீதான வரிக் குறைப்பால், அன்றாட பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள் வரை, அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி மாலை 5 மணிக்கு 19 நிமிடம் உரையாற்றினார்.
அதில், இது நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு வேகமூட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈா்க்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-இல் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டது.
இந்த ஜிஎஸ்டி குறைப்பால் இந்திய மக்களின் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்படும் என்று அரசு தெரிவிக்கிறது.
ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக மக்களிடம் ஆண்டு தோறும் ரூ.2.5 லட்சம் கோடியை பெற்று ஒன்றிய அரசு மோசடி செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
