செய்திகள் இந்தியா
ஹிந்து உணர்வுகளை புண்படுத்தியதாக புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
புது டெல்லி:
ஹிந்து உணர்வுகளை புண்படுத்தியதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது ஹந்து அமைப்புகள் தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வந்தநிலையில், அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என அவர் விளக்கமளித்தார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயிலில் விஷ்ணுவின் சிலையை மறுகட்டமைப்பு செய்து 7 அடி உயரச் சிலையாக நிறுவ வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு தள்ளுபடி செய்தது. அப்போது பி.ஆர்.கவாய், இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். உங்களது கடவுளிடமே வழிபட்டு தியானம் செய்து தீர்வு காணுங்கள் என கூறினார்.
ஹிந்து மத உணர்வுகளை கவாய் புண்படுத்தியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் தெரிவித்தன.
இதற்கு விளக்கமளித்த கவாய், வழக்கு விசாரணை ஒன்றில்போது நான் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் திரித்து பரப்பப்படுவதாக தெரிந்து கொண்டேன். அனைத்து மதங்களையும் எப்போதும் மதிக்கிறேன் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
