நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளாவில் ஆபத்தான மூளை தின்னும் உயிரணு

திருவனந்தபுரம்:

இந்தியாவின் கேரள மாநிலத்தில் அபாயகரமான மூளை தின்னும் உயிரணு அதிகளவில் பரவுகிறது.

அந்த அரிய வகை உயிரணுவால் உயிரிழப்பு ஏற்படலாம்.

கடந்த ஆண்டு 36 சம்பவங்களும் 9 மரணங்களும் பதிவானதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 69 சம்பவங்களும் 19 மரணங்களும் பதிவானதாக மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.

சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல என்றும் சொல்லப்பட்டது.

கடந்த மாதம் (ஆகஸ்ட்) 3 மாதக் குழந்தை உட்பட 3 பேர் மாண்டனர்.

அந்தப் பெரும் சுகாதாரச் சிக்கலைக் கையாள அதிகாரிகள் சோதனைகள் மேற்கொள்கின்றனர்.

உயிரணுக்கள் நீர்நிலைகளில் தழைப்பதால் அவற்றை அகற்றும் முயற்சியாகப் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் குளோரின் (chlorine) கலக்கப்படுகிறது.

ஆதாரம்: NDTV

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset