
செய்திகள் மலேசியா
உயர் கல்வியமைச்சின் பொறுப்பில் எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன்; இந்திய மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பிறக்குமா?: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன் கல்வித் திட்டங்களுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்பதால் இந்திய மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பிறக்குமா?.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இக்கேள்வியை எழுப்பினார்.
அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதில் இந்திய மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக தகுதியான பல மாணவர்களுக்கு இடம் கிடைப்பது இல்லை.
அப்படியே கிடைத்தாலும் விண்ணப்பிக்கும் துறை அம்மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.
இப்பிரச்சினை நீண்ட கால இழுப்பறியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன் கல்வித் திட்டங்களுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை நியாயமான, வெளிப்படையான பல்கலைக்கழக சேர்க்கை முறைக்கு வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.
நிக் நஸ்மியின் இக்கூற்று உண்மை இருந்தால் அதனை அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்
இதன் வாயிலாக பல ஆண்டுகளாக இந்திய மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பிறக்கும் என்றால் அதனை உடனே அமல்படுத்த வேண்டும்.
அதே வேளையில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
குறிப்பாக இந்திய மாணவர்களின் உயர் கல்வி கனவிற்கு அரசாங்கம் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 11:58 am
2026 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது: ஷம்சுல் அஸ்ரி
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am
கம்போங் சுங்கை பாரு பிரச்சினையை வெளியாட்கள் அரசியலாக்க வேண்டாம்: ஜொஹாரி சாடல்
September 18, 2025, 9:26 am
பூலாவ் கேரியில் 1,699.68 ஹெக்டேர் நிலத்தில் சிலாங்கூரின் மூன்றாவது துறைமுகம் அமைகிறது: அமிருத்தீன் ஷாரி
September 18, 2025, 8:39 am