
செய்திகள் மலேசியா
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்
கோலாலம்பூர்:
பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து கிளப் கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து கிளப் தலைவர் சேகரன் வேலாயுதம் இதனை தெரிவித்தார்
இப்போட்டி வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு செராஸ் அரினா டிபிகேஎல் பேட்மிண்டன் அரங்கில் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
விலாயா மாநிலத்தில் உள்ள 15 தமிழ்ப் பள்ளிகளில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 230க்கும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி இடம் பெறுகிறது.
இரண்டு ஒற்றையர் மற்றும் மூன்று இரட்டையர் பிரிவில் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
குருப் லீக் பாணியில் போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
கால் இறுதியில் வெற்றி பெறும் நான்கு குழுக்கள் அரையிறுதி சுற்றில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் இரண்டு குழுக்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு பெறும் என்று அவர் கூறினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் செல்லும் குழுவுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மெடல் வழங்கப்படும்.
மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
மலேசிய பூப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ பாராட் மணியம், அனைத்துலக பூப்பந்து சம்மேளனத்தின் உறுப்பினர் வேணுகோபால் ஆகியோரும் சிறப்பு வருகை புரிகின்றனர் .
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் பூப்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டி மாபெரும் அளவில் நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 1:27 pm
ஷாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்
September 17, 2025, 1:24 pm
சபா, கிளந்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
September 17, 2025, 1:23 pm
கேஎல்ஐஏ 2இன் மின்சார மூலத்தை மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்: அந்தோனி லோக்
September 17, 2025, 1:22 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொழுகைகளை நடத்த பள்ளிவாசல், சூராவ்களுக்கு உத்தரவு
September 17, 2025, 11:13 am
சோலார் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை நீக்கக் கோரிய ரோஸ்மாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது
September 17, 2025, 11:01 am
மக்கள் மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக பிரதமர் வேட்பாளரை தேசியக் கூட்டணி அறிவிக்க வேண்டும்: துன் பைசால்
September 17, 2025, 11:00 am
தேசியக் கூட்டணியை வழிநடத்த பாஸ் இப்போது தயாராக உள்ளது: தக்கியூடின்
September 17, 2025, 10:59 am
துவாஸ் சோதனைச் சாவடியில் 18,400 மின்சிகரெட்டுகள் பறிமுதல்: மலேசியர் கைது
September 16, 2025, 11:48 pm