
செய்திகள் மலேசியா
ஜொகூரில் மின்-சிகரெட்டு வாங்குவோரில் சிங்கப்பூரர்களே அதிகம்
ஜோகூர் பாரு:
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதோடு அதனை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜொகூர் பாருவில் மின்-சிகரெட் வாங்குவோரில் பெரும்பகுதியினர் சிங்கப்பூரர்கள் என்று அங்குள்ள கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
ஜொகூரிலும் மின்-சிகரெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடைகளில் இதரப் பொருள்களுக்கு மத்தியில் மின்-சிகரெட்டுகளை அவர்கள் மறைத்து விற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிப்படும் மின்-சிகரெட்டுகளை சிங்கப்பூரர்கள் அதிகம் வாங்குவதாக மற்றொருவர் சொன்னார்.
பேராங்காடியிலுள்ள சிறுசிறு கடைகள் தவிர்த்து ஜொகூர் பாருவில் மின்-சிகரெட்டுகளை மட்டுமே விற்பனை செய்யும் தனிப்பட்ட கடைகளும் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் அவை ரகசியமாகச் செயல்படுவதில் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றன.
முன்பு சிங்கப்பூருக்கு வாகனங்களில் சென்று மின்-சிகரெட்டை வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்துவந்த ஓட்டுநர்கள் தற்போது அவ்வாறு செய்யப் பயப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் கள்ளச்சந்தையில் விற்கப்படும் மின்-சிகரெட்டுகளின் விலை ஜொகூரைக் காட்டிலும் மும்மடங்கு அதிகம்.
சிங்கப்பூரில் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து கடுமையான தண்டனைகள் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
September 11, 2025, 6:41 pm
நெகிழியிலிருந்து விடுபடுவோம்: அழைப்பு விடுக்கும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
September 11, 2025, 6:29 pm
இங்கிலாந்தில் சொத்து இருப்பது குறித்து எனக்கு தெரியாது: துன் மகாதீர்
September 11, 2025, 6:04 pm
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கம்போங் சுங்கை பாருவில் 37 வீடுகள் காலி செய்யப்பட்டன: போலிஸ்
September 11, 2025, 5:27 pm
மலேசியாவில் மின்-சிகரெட் கட்டங்கட்டமாகத் தடை செய்யப்படும்: சுகாதார அமைச்சர் ஸுல் கிஃப்லி
September 11, 2025, 4:06 pm
நீதிபதி பதவி விலகக் கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
September 11, 2025, 3:51 pm
டாங் வாங்கி போலிஸ் தலைவரை காயப்படுத்தியது ஒரு இழிவான, கண்டிக்கத்தக்க செயலாகும்: அன்வார்
September 11, 2025, 2:02 pm