செய்திகள் இந்தியா
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
புது டெல்லி:
மத்திய பிரதேசத்தில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சோஹன் சிங் பாலியல் வன்கொடுமை வழக்கில் 2005-ம் ஆண்டு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். தேவையான ஆதாரம் இல்லை எனக் கூறி ஆயுள் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து 2017-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சோஹன் சிங்கை விடுதலை செய்யாதது அடிப்படை உரிமையை மீறும் செயல் எனக் கூறி, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
