செய்திகள் இந்தியா
8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டி வரி குறைப்பு: எந்த பொருள்கள் விலை குறைகிறது? எது அதிகரிக்கிறது?
புது டெல்லி:
ஜிஎஸ்டி அறிமுகமாகி மாத ரூ. 1 லட்சம் கோடியை தாண்டி அரசு வசூலித்து வந்தநிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரசு வரியை குறைத்துள்ளது.
அதன்படி, 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும்,
விலை உயரும் பொருட்களின் விவரம்.விலை குறையும் பொருட்கள்:
32 இன்ச்களுக்கு மேலான டிவி, ஏசி, மானிட்டர், டிஷ் வாஷ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மீதான அவரை 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பேரீச்சம்பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி, கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் 12%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள், கோகோ பொருட்கள் 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மிக்சர் உள்ளிட்ட சாப்பிட தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
விவசாய உரங்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கும், பென்சில், கிரேயான்ஸ் உள்ளிட்ட எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்களுக்கும் இனி ஜிஎஸ்டி வரி இல்லை.
விலை உயரும் பொருட்கள்: பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கும், சொகுசு கார்களுக்கும் 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
