செய்திகள் இந்தியா
பேரணியில் பைக்கை இழந்த தொண்டருக்கு புதிய பைக் அளித்த ராகுல்
புது டெல்லி:
பிகாரில் பேரணியின்போது பைக்கை தொலைத்த நபருக்கு புதிய பைக்கை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரிசளித்தார்.
பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி ராகுல் பிகாரில் பேரணி நடத்தி வருகிறார். இதில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியின்போது தர்பங்காவில் இருசக்கர வாகனப் பேரணியையும் ராகுல் காந்தி மேற்கொண்டார். அப்போது, ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் பயணிப்பதற்கு தனது இருசக்கர வாகனத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த சுபம் சௌரப் என்ற நபர் கொடுத்துள்ளார்.
பேரணிக்கு பிறகு தனது இருசக்கர வாகனம் தொலைந்துவிட்டது அவருக்குத் தெரியவந்தது. இதுகுறித்த தகவல் வெளியானதையடுத்து பேரணி செல்லும் வழியில் காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்தி புதிய மோட்டார் சைக்கிளுக்கான சாவியை சுபம் சௌரப்புக்கு அளித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
