செய்திகள் இந்தியா
குடியரசு துணைத் தலைவருக்கான ஓய்வூதியத்துடன் எம்எல்ஏ ஓய்வூதியத்தை கோரும் இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்
ஜெய்பூர்:
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எம்எல்ஏ உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து திடீரென உடல் நலக் குறைவு காரணத்தை கூறி தன்கர் ராஜிநாமா செய்தார். ஏதோ நிர்பந்தத்தின்பேரில் அவர் ராஜிநாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் கூறின.
அவரும் சில நாள்கள் தொடர்பு இல்லாமல் இருந்ததால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின.
இந்நிலையில், ஜகதீப் தன்கர், 1993 முதல் 1998 ஆண்டுவரை ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார். அதனால் முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்தை கோரியுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படும் வரை முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை அவர் பெற்று வந்தார்.
இதைத் தவிர முன்னாள் குடியரசு துணைத் தலைவருக்கான ஓய்வூதியமாக ஜகதீப் தன்கர் மாதம் சுமார் ரூ.2 லட்சம் ஓய்வூதியமும் பெறுகிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
