செய்திகள் இந்தியா
காங்கிரஸ் தலைமையகத்தை சூறையாடிய பாஜகவினர்
புது டெல்லி:
பிகாரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வாக்குரிமை பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக கூறி அந்த மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் சூறையாடினர்.
பிகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக ராகுல் நடத்தி வரும் பேரணியில் திடீரென ஒருவர் மைக்கில் பிரதமர் மோடியை அவதூறாக பேசினார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து பாட்னாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தை நோக்கி பாஜக தொண்டர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதையடுத்து. காங்கிரஸ் அலுவலகத்துக்குள் புகுந்த அவர்கள் அலுவலகத்தை சூறையாடினர்.
பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
