
செய்திகள் இந்தியா
இந்தியா முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
புதுடெல்லி:
நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் 18,000 அட்மிஷன் போடப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் என்ஆர்ஐ மாணவர்கள் பலர் உண்மையில் வெளிநாட்டினர் இல்லை. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏஜென்டுகளுக்கு பணம் கொடுத்து போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். உள்நாட்டு மாணவர்களை வெளிநாடு வாழ் இந்தியர்போல காட்ட ஏஜென்டுகளும் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஆர் ஒதுக்கீட்டில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் கல்லூரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்கள் சிக்கியுள்ளன.
இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வங்கியில் வைத்துள்ள வைப்பு தொகை ரூ.6.42 கோடியை முடக்கியுள்ளது. இதேபோல் முறைகேட்டில் ஈடுபட்ட சில தனியார் கல்லூரிகளின் ரூ.12.33 கோடியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 7:09 pm
காங்கிரஸ் தலைமையகத்தை சூறையாடிய பாஜகவினர்
August 31, 2025, 7:02 pm
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் மோடி: இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் பேச்சு
August 27, 2025, 5:48 pm