
செய்திகள் மலேசியா
பிஜேஎஸ்-1 தமிழ்ப் பள்ளிக்கு ஸ்மார்ட்போர்டை அன்பளிப்பு செய்தார் டத்தோ மோகன்
பெட்டாலிங் ஜெயா:
பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள பிஜேஎஸ்- I தமிழ்ப்பள்ளிக்கு டத்தோ டி. மோகன் ஸ்மார்ட்போர்டு அன்பளிப்பு செய்தார்.
பிஜேஎஸ்- 1 தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ லெட்சுமி ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட டத்தோ டி.மோகன் இந்த ஸ்மார்ட் போர்ட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பிஜேஎஸ் 1 தமிழ்ப் பள்ளியில் தற்போது பாலர்பள்ளி மாணவர்கள் உட்பட 225 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் 22 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் காலத்தில் நாட்டில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் கட்டப்பட்டது. அதில் ஒரு தமிழ்ப் பள்ளி பிஜேஎஸ் 1 தமிழ்ப் பள்ளியும் ஒன்றாகும்.
நான்கு மாடி கட்டடங்களுடன் மிகவும் நவீன வசதிகளுடன் இந்த தமிழ்ப் பள்ளி காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2025, 12:03 pm
மடானி பட்டதாரி திட்டத்தை. எச்ஆர்டி கோர்ப் அறிமுகப்படுத்துகிறது: டாக்டர் சைட் அல்வி
August 23, 2025, 11:51 am
மலேசியாவிற்கு JPMorganChase RM1.4 பில்லியன் செலுத்த உள்ளது
August 23, 2025, 10:54 am
KTMB இன் ETS3 சேவையை பேரரசர் துவக்கி வைத்து குளுவாங்கிற்கு ரயிலை செலுத்துகிறார்
August 22, 2025, 7:11 pm
பினாங்கு உணவகங்களில் எலி எச்சங்கள்: MBPP மூன்று உணவகங்களை மூடியது
August 22, 2025, 6:57 pm