
செய்திகள் மலேசியா
ஏ.டி.எம். உறுப்பினர்கள் கைது: நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை பிரதிபலிக்கவில்லை
கோலாலம்பூர்:
மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம்-இன் சில உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், நாட்டின் முழுமையான பாதுகாப்பு அம்சத்தை பிரதிபலிக்கவில்லை.
ஏ.டி.எம். மக்களால் மதிக்கப்படுவதாகவும், அது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுவதாகவும் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹம்மத் காலித் நோர்டின் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அது நிச்சயமாக நமது படைகள், அமைச்சின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். சட்டத்திற்கு புறம்பான செயல்களைச் செய்ய யாரும் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தற்காப்பு அமைச்சு அளவிலான 2025-ஆம் ஆண்டு தேசிய மாதம், ஜாலுர் கெமிலாங்கை பறக்கவிடும் பிரச்சார அறிமுக விழாவில் டத்தோ ஶ்ரீ முஹம்மத் காலித் உரையாற்றினார்.
கடத்தல் நடவடிக்கைக்கு உடந்தையாக செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் அரச மலேசிய இராணுவப் படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த மூன்று மூத்த அதிகாரிகள் மற்றும் இரு முன்னாள் அதிகாரிகள், Op Sohor சோதனை நடவடிக்கையின் வழி முன்னதாக கைது செய்யப்பட்டனர்.
- பெர்னாமா
தொடர்புடைய செய்திகள்
August 21, 2025, 11:13 pm
குவாந்தான் விமானப்படை தளத்தில் விமானப்படை போர் விமானம் விபத்துக்குள்ளானது
August 21, 2025, 5:24 pm
பணியிடங்களில் பகடிவதை; சுகாதார அமைச்சு சமரசம் கொள்ளாது: டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத்
August 21, 2025, 4:26 pm
"ஃபத்லினா எங்கே?" போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகள்
August 21, 2025, 3:57 pm
KLIA விமான நிலையத்தில் வெளிநாட்டினரை சோதனைகள் இல்லாமல் நுழைய அனுமதித்த இரு மூத்த அதிகாரிகள் கைது
August 21, 2025, 10:59 am
காலாவதியான உரிமங்கள்: JPJ மூன்று பேருந்துகளை பறிமுதல் செய்தது
August 20, 2025, 11:38 pm
மாணவி சாரா கைரினா மகாதீர் மரணம்: 5 பதின்ம வயதுப் பெண்கள் மீது குற்றச்சாட்டு
August 20, 2025, 10:31 pm