
செய்திகள் மலேசியா
சாலை விபத்தில் இரு கால்களை இழந்த மாதுவிற்கு பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதி சேவை மையம் நிதியுதவி வழங்கியது
பத்துகாஜா:
சாலை விபத்தில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்த ஒரு பெண்ணின் துயரம் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக அவரது உடல்நிலையில் இன்னும் எந்த நேர்மறையான மாற்றங்களும் ஏற்படவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் கூற்றுப்படி, குணமடைய நீண்ட நேரம் எடுக்கும், ஒருவேளை ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என்று அப்பெண்மணியை நேரில் சென்று நலம் விசாரித்து உதவியபோது இவ்வாறு கூறினார் பத்தகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்.
தற்போது அவர் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார், மேலும் அவரது வாழ்க்கைச் செலவுகள் அனைத்தையும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பொறுமையாக கவனித்துக்கொள்கிறார்கள். இந்த சூழ்நிலை அவர்களுக்கு நிதி அழுத்தத்தை உருவாககி இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் எதிர்கொள்ளும் உடனடி சுமையைக் குறைக்க, பத்துகாஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் அவசரகால பயன்பாட்டிற்காக 2 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கி உதவியுள்ளது. கூடுதலாக, இவ்விவகாரம் தொடர்பாக சொக்சோ தரப்பினரிடம் வழங்கி அதற்கான செயல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் உதவிகள் வாயிலாக அவரது மறுவாழ்வு நோக்கங்களுக்காக பயற்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.
நிதி அல்லது தார்மீக ஆதரவு வடிவில், மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எனது ஆழ்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் அம்மாது தெரிவித்துக் கொண்டார்.
அவருடைய வலிமை, பொறுமை மற்றும் விரைவாக குணமடைய, ஒரு நாள் வழக்கம் போல் தன் வாழ்க்கையை வாழவும் நாம் அவருக்கு பிரார்த்திப்போம். அவரின் பாதுகாப்பு மற்றும் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர், இருப்பிடம் தகவல் தவிர்க்கப்பட்டுள்ளது.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 11:38 pm
மாணவி சாரா கைரினா மகாதீர் மரணம்: 5 பதின்ம வயதுப் பெண்கள் மீது குற்றச்சாட்டு
August 20, 2025, 10:31 pm
புந்தோங் மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
August 20, 2025, 6:13 pm
மஞ்சோய், பங்கோர் அரசாங்க கிளினிக் அடுத்தாண்டு தொடக்கத்தில் திறக்கப்படும்: அ.சிவநேசன்
August 20, 2025, 6:09 pm
சுதந்திர உணர்வு மாணவர்களிடையே மலர செய்வது அவசியமாகும்: வழக்கறிஞர் சி. லாவண்யா
August 20, 2025, 11:54 am
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக குமாரின் நியமனம் சரியானதே: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
August 20, 2025, 9:31 am
கோலாலம்பூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
August 19, 2025, 6:43 pm
அமெரிக்காவில் 12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
August 19, 2025, 6:30 pm