நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒட்டு திருட்டை எதிர்த்து பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி

புதுடெல்லி: 

ஒட்டு திருட்டை எதிர்த்தும் வாக்​காளர் உரிமையை நிலைநாட்டுவதற்குமான யாத்​திரையை  பிஹாரில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்​தார். இதற்​கான விழா​வில், காங்​கிரஸ் கட்சி தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலை​வர்​கள் லாலு பிர​சாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

பிஹாரில் விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், சசா​ரமில் தொடங்​கிய இந்த யாத்​திரை​யின் மூலம் 1,300 கி.மீ தூரம் பயணித்து மக்​களிடையே வாக்​காளர் திருட்​டுக்கு எதி​ரான பிரச்​சா​ரங்​களை இந்​தியா கூட்​டணி முடுக்கி விட உள்​ளது.

யாத்​திரை தொடக்க விழா​வின்​போது ராகுல் பேசும்போது, ‘‘இந்த யாத்​திரை அரசி​யலமைப்பை காப்​பாற்​று​வதற்​கான போ​ராட்​டம். நாடு முழு​வ​தி​லும் சட்​டமன்ற தேர்​தல்​கள், மக்​களவை தேர்​தல்​கள் திருடப்​படு​கின்​றன.

பிஹாரில் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொண்டு வாக்​காளர்​களை நீக்​கு​வது மற்​றும் சேர்ப்​ப​தன் மூலம் வாக்​கு​களை திருட ஒரு புதிய சதி செய்​யப்​பட்​டுள்​ளது. பிஹாரில் தேர்​தல்​களை திருட நாங்​கள் அனு​ம​திக்க மாட்​டோம்.ஏழைகளிடம் மிஞ்​சி​யுள்​ளது வாக்​குரிமை மட்​டுமே. அதை​யும் அவர்​கள் பறித்​துக்​கொள்ள நாங்​கள் அனு​ம​திக்க மாட்​டோம்’’ என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset