
செய்திகள் இந்தியா
ஒட்டு திருட்டை எதிர்த்து பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி
புதுடெல்லி:
ஒட்டு திருட்டை எதிர்த்தும் வாக்காளர் உரிமையை நிலைநாட்டுவதற்குமான யாத்திரையை பிஹாரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான விழாவில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சசாரமில் தொடங்கிய இந்த யாத்திரையின் மூலம் 1,300 கி.மீ தூரம் பயணித்து மக்களிடையே வாக்காளர் திருட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை இந்தியா கூட்டணி முடுக்கி விட உள்ளது.
யாத்திரை தொடக்க விழாவின்போது ராகுல் பேசும்போது, ‘‘இந்த யாத்திரை அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம். நாடு முழுவதிலும் சட்டமன்ற தேர்தல்கள், மக்களவை தேர்தல்கள் திருடப்படுகின்றன.
பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வாக்காளர்களை நீக்குவது மற்றும் சேர்ப்பதன் மூலம் வாக்குகளை திருட ஒரு புதிய சதி செய்யப்பட்டுள்ளது. பிஹாரில் தேர்தல்களை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.ஏழைகளிடம் மிஞ்சியுள்ளது வாக்குரிமை மட்டுமே. அதையும் அவர்கள் பறித்துக்கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 12:11 pm
ஐதராபாத்தில் கிருஷ்ணர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு
August 18, 2025, 8:08 am
சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு
August 17, 2025, 5:19 pm
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை மையம் தகவல்
August 17, 2025, 10:29 am
கடனுக்கு வாங்கிய லாட்டரி; பேருந்து நடத்துனருக்கு அடித்தது ஜாக்பாட்: கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு
August 15, 2025, 11:30 am
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு
August 14, 2025, 6:20 pm
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
August 14, 2025, 6:10 pm
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
August 14, 2025, 2:26 pm
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
August 14, 2025, 11:02 am