
செய்திகள் இந்தியா
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை மையம் தகவல்
டெல்லி:
தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடற்கரைகளுக்கு அப்பால் மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்று சுழற்சி நிலவி வந்தது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுபெறும் என்றும் நாளை மறுநாள் அதிகாலை தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடற்கரைகளை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 8:08 am
சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு
August 17, 2025, 10:29 am
கடனுக்கு வாங்கிய லாட்டரி; பேருந்து நடத்துனருக்கு அடித்தது ஜாக்பாட்: கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு
August 15, 2025, 11:30 am
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு
August 14, 2025, 6:20 pm
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
August 14, 2025, 6:10 pm
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
August 14, 2025, 2:26 pm
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
August 14, 2025, 11:02 am
இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து
August 14, 2025, 10:03 am
20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்
August 13, 2025, 12:32 pm