
செய்திகள் இந்தியா
கடனுக்கு வாங்கிய லாட்டரி; பேருந்து நடத்துனருக்கு அடித்தது ஜாக்பாட்: கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு
கல்பெட்டா:
கேரள மாநிலம் கல்பெட்டா பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை செய்பவர் ஜெயேஷ் குமார். இவர் கல்பெட்டா புது பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள அம்மா லாட்டரி கடையில் உள்ள ஊழியர்களிடம் 5 தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டுகளை எடுத்து வைக்கும்படி கூறியுள்ளார்.
அதற்கான பணத்தை பிறகு கொடுப்பதாக கூறியுள்ளார். அதாவது கடனுக்கு லாட்டரி டிக்கெட்டுகளை அவர் வாங்கியுள்ளார். வழமையாக அவர் சீட்டுகளை வாங்குவதால் அவருக்குரிய 5 லாட்டரி டிக்கெட்டுகளை எடுத்து வைத்துள்ளார் கடைக்காரர்.
அதன்படி ஜெயேஷ் குமாருக்கு 5 லாட்டரி டிக்கெட்டுகளை ஊழியர் ஸ்வாதி சத்யன் தனியாக எடுத்து வைத்து விட்டார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை குலுக்கல் நடைபெற்றது. அதில் ஜெயேஷ் குமாருக்காக எடுத்து வைத்திருந்த 5 டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்திருந்தது.
உடனடியாக குமாரை அழைத்து லாட்டரி கடை ஊழியர் ஸ்வாதி தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து குமார் கூறும்போது, ‘‘ஸ்வாதி கூறியதும் முதலில் நான் நம்பவில்லை. அவர் கிண்டலடிக்கிறார் என்று நினைத்தேன். இந்த பரிசு பணத்தில் நான் வீடு வாங்குவேன்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 8:08 am
சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு
August 17, 2025, 5:19 pm
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை மையம் தகவல்
August 15, 2025, 11:30 am
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு
August 14, 2025, 6:20 pm
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
August 14, 2025, 6:10 pm
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
August 14, 2025, 2:26 pm
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
August 14, 2025, 11:02 am
இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து
August 14, 2025, 10:03 am
20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்
August 13, 2025, 12:32 pm