செய்திகள் இந்தியா
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
புது டெல்லி:
இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அட்டை பெற்றுள்ளார் என பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார்.
அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, எக்ஸ் பதிவில், கடந்த 1983-ம் ஆண்டுதான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்.
அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலேயே சோனியா காந்தி பெயர் இடம்பெற்றது. அதன்பின்னர் கடந்த 1982-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து சோனியா காந்தி பெயர் நீக்கப்பட்டது. இது வாக்காளர் சட்டப்படி அப்பட்டமான விதிமீறல் இல்லையா?
அதன்பின் மீண்டும் 1983-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் சோனியா பெயர் சேர்க்கப்பட்டது.
ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பிறகு இந்திய குடியுரிமை பெறுவதற்கு 15 ஆண்டுகள் சோனியா காந்தி காத்திருந்தது ஏன்? சோனியா காந்தியின் விதிமீறல் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
