
செய்திகள் இந்தியா
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
புது டெல்லி:
வங்களில் பணம் இருந்தால் மாலை 4 மணிக்கு பிறகு 3 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை வழங்கிவிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக வங்கிகளில் CHEQUE - காசோலைகளை பணமாக்க 2 நாட்களாகும். இது தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
காசோலை தீர்வு திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த சி.டி.எஸ். முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்து இதற்கான சுற்றறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதில், சி.டி.எஸ். முறையில் இரண்டு கட்டங்களாக மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
முதல்கட்டம் அக்டோபர் 4-ந் தேதி முதலும், இரண்டாம் கட்டம் வருகிற ஜனவரி 3-ந் தேதி முதலும் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்த விதிமுறைகளின்படி வங்கிகளால் பெறப்பட்ட காசோலைகள் உடனடியாகவும், தொடர்ச்சியாகவும் வங்கிகளால் ஸ்கேன் செய்யப்பட்டு தீர்வு மையத்துக்கு அனுப்பப்படும்.
பின்னர் வழங்கப்பட்ட ஒவ்வொரு காசோலைக்கும் வங்கி நேர்மறையான உறுதிப்படுத்தல் அல்லது எதிர்மறை உறுதிப்படுத்தலை உருவாக்கும்.
இதன் மூலம் அன்றைய தினம் மாலை 4 மணிக்குள் பெறப்படும் காசோலைகள் அன்று இரவு 7 மணிக்குள் பணம் பெறும் வங்கிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
2-ஆவது கட்டத்தில் காசோலை பெறப்பட்டதில் இருந்து 3 மணி நேரத்துக்குள் அங்கீகரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 6:20 pm
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
August 14, 2025, 6:10 pm
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
August 14, 2025, 11:02 am
இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து
August 14, 2025, 10:03 am
20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்
August 13, 2025, 12:32 pm
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
August 13, 2025, 11:39 am
தெரு நாய்க் கடியில் இருந்து மக்களை காப்பாற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
August 13, 2025, 11:27 am
டெல்லி- வாஷிங்டன் ஏர் இந்தியா விமான சேவை செப்.1 முதல் நிறுத்தம்
August 11, 2025, 5:36 pm
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
August 11, 2025, 4:56 pm