செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை - மதுரை தேஜஸ் உள்ளிட்ட 2 ரயில்கள் இன்று முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து புறப்படும்
சென்னை:
சென்னை - மதுரை தேஜஸ் ரயில் உள்ளிட்ட 2 ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) இன்று முதல் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதனால், மொத்தம் உள்ள 11 நடைமேடைகளில் 4-இல் பணிகள் நடைபெறுவதன் காரணமாக ரயில்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், எழும்பூரில் இருந்து புறப்பட்ட சில ரயில்கள், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மேம்பாட்டுப் பணிகள் குறிப்பிட்ட அளவுக்கு நிறைவடைந்திருப்பதை அடுத்து சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் ரயில் (எண் 22671), சென்னை எழும்பூா் - புதுச்சேரி மெமு விரைவு ரயில் (எண் 66051) ஆகிய ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
இதேபோல, மறுமாா்க்கத்தில் மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் ரயில் (எண் 22672), புதுச்சேரி - சென்னை எழும்பூா் மெமு விரைவு ரயில் (எண் 66052) ஆகிய ரயில்கள் எழும்பூா் வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
November 29, 2025, 3:05 pm
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்
November 28, 2025, 8:18 pm
பாம்பனில் புயல்: தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்
November 27, 2025, 2:17 pm
