நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்

சென்னை: 

அரசி​யல் எதிர்​காலம் குறித்த கேள்​வியோ, சந்​தேகமோ தேவை​யில்​லை. உங்​கள் எதிர்​காலம் நான்​தான். உங்​களின் நிகழ்​கால​மும் நான்​தான். எப்​போதும் போல உங்​களோடு நான் நிற்​கிறேன் என்று தொண்​டர்​களுக்கு பாமக நிறு​வனர் ராம​தாஸ் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில் சமூகநீ​தி​யின் அடை​யாள​மாக​வும், அனைத்து தரப்பு மக்​களின் பாது​காவல​னாக​வும் திகழும் பாமக வரும் ஜூலை 16-ம் தேதி 36 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 37-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது. பாமக​வின் துணை இல்​லாமல், மக்​களுக்​கான எந்த நியாய​மும், மத்​தி​யிலோ, மாநிலத்​திலோ இது​வரை யாராலும் பெற்று தரப்​பட​வில்லை என்ற ஒன்றே போது​மானது.

மக்​கள் நலன்​சார்ந்து எப்​போதும் யாரை​யும் எதிர்த்து நிற்​கிற கட்​சி​யாக பாமக இருந்து வரு​வதை நினைத்து பெரு​மையடைகிறேன். அரசி​யல்​ரீ​தி​யாக மட்​டுமல்ல, சட்​டரீ​தி​யாக​வும், சமூக வலை​தளங்​கள், ஊடகங்​கள், திரளான மக்​கள் போராட்​டத்​தின் மூல​மாக எனக்கு போராட தெரி​யும். நியா​யம் பெற்​றுத்​தர​வும் முடி​யும். எப்​போதும்​போல துடிதுடிப்​புடன் உங்​கள் ஒவ்​வொரு​வரின் குரல்​களை​யும் நான் உள்​வாங்கி கொண்​டு​தான் இருக்​கிறேன்.

இது​வரை நாம் கடந்து வந்த 36 ஆண்​டு​களை​விட, இந்த 37-ம் ஆண்டு பல புதிய அனுபவங்​களை கொண்டு வந்து சேர்த்​திருக்​கிறது. இனி நமக்​கெல்​லாம் பொற்​காலம்​தான். உங்​கள் வீடு​கள், அலு​வலக முகப்​பு​களில் பாமக​வின் கொடிகளை ஏற்​றுங்​கள். ஏழை மக்​களுக்கு சட்​டஉத​வி​யும், மருத்​துவ உதவி​யும், கல்வி உதவி​யும் செய்​வ​தில் முதன்​மை​யான நபர்​களாக இருங்​கள். உங்​களின் உற்​சாகக் குரலே என்னை புதுப்​பிக்கிறது. உற்​சாகப்​படுத்​துகிறது.

எதிரே எத்​தனைபேர் என்று கணக்கு வைத்து கொள்​ளாமல் மோதிப் பார்க்க சொல்​கிறது. எதிர்க்க இளைஞர்​களை மட்​டுமே மனசு எதிர்​பார்க்​கிறது. பாட்​டாளி சொந்​தங்​களின் நெடு​நாள் கனவைநிறைவேற்ற எனக்​குள் புதுரத்​தம் பாய தொடங்கி இருக்​கிறது. அரசி​யல் எதிர்​காலம் குறித்த கேள்​வியோ, சந்​தேகமோ பாட்​டாளி சொந்​தங்​களுக்கு தேவை இல்​லை. உங்​கள் எதிர்​காலம் நான்​தான். உங்​களின் நிகழ்​கால​மும் நான்​தான். எப்​போதும் போல உங்​களோடு நான் நிற்​கிறேன். போர்க்​குண​முள்ள சிங்​கத்​தின் கால்​களும்பழுதுப​டாது, அதன் சீற்​ற​மும் குறை​யாது. மக்​களுக்​காக கொடுக்​கும்​ அதன்​ கர்​ஜனை​யும்​ மாறாது. இவ்​வாறு தெரிவித்​துள்​ளார்​.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset