செய்திகள் தமிழ் தொடர்புகள்
அமெரிக்கா-ஈரான் இடையேயான போா் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
அமெரிக்கா-ஈரான் இடையேயான போா் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்சபட்ச தலைவா் அயதுல்லாஹ் அலி கமேனி அமெரிக்கா-இஸ்ரேலிய கூட்டுப் படை நிகழ்த்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடா்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று ஆயிரக்கணக்கான பொது மக்கள் அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுமக்கள் துரகத்துக்குள் நுழைந்து சூறையாடினர். இறுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 22 பேர் கொல்லப்பட்டனர். அந்த நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில். சென்னை அண்ணா சாலை பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 உதவி ஆணையா்கள் மேற்பாா்வையில் 200 போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அமெரிக்க தூதரகத்தைச் சுற்றியுள்ள கதீட்ரல் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பீட்டா்ஸ் சாலை பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா, தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு பகுதிகளில் ஷியா பிரிவு இஸ்லாமியா்கள் அதிகமாக வசிப்பதால் அந்தப் பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 2, 2026, 6:30 am
அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் 73-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து
February 27, 2026, 12:52 pm
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தி மு க வில் இணைந்தார்
February 26, 2026, 3:40 pm
முன் அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்: தவெகவினருக்கு கட்டுப்பாடு
February 26, 2026, 2:32 pm
திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்: கே.என்.நேரு
February 25, 2026, 5:05 pm
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைந்தார்
February 25, 2026, 3:48 pm
சென்னை புறநகர் ரயில் சேவைகள் பாதிப்பு மார்ச் 2க்குள் தீர்வு காணப்படும்: தயாநிதி மாறன்
February 25, 2026, 7:19 am
புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா: கட்சிக் கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம்
February 24, 2026, 3:34 pm
