நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டியாகோ ஜோத்தாவின் மரணம்  அர்த்தமற்றது: ரொனால்டோ

ரியாத்:

டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது என போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறினார்.

ஸ்பெயினின் ஜமோரா மாநிலத்தில் உள்ள செர்னாடில்லா நகராட்சியில் நள்ளிரவுக்குப் பிறகு வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில், 

28 வயதான லிவர்பூல், போர்த்துகல் நட்சத்திரம் டியாகோ ஜோத்தா தனது தம்பி ஆண்ட்ரேடன் இறந்தார்.

இந்நிலையில்  கிறிஸ்டியானோ ரொனால்டோ கார் விபத்தில் இறந்த தனது அனைத்துலக அணி வீரர் டியோகோ ஜோத்தாவுக்கு அஞ்சலி செலுத்தி, நாங்கள் அனைவரும் உங்களை மிஸ் செய்வோம் என்று கூறினார்.

அவரின் மரணம் அர்த்தமற்றது.

நாங்கள் தேசிய அணியுடன் ஒன்றாக விளையாடினோம். கடந்த மாதம் தேசிய லீக் பட்டத்தை வென்றோம்.

இப்போதுதான் அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இப்போது அவர் நம்மிடம் இல்லை என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset