நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் புகாயோ சகா அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்  அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியிடம் தோல்வி கண்டனர்.

செல்சி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset