
செய்திகள் உலகம்
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
டெல் அவிவ்:
இஸ்ரேல் - ஈரான் போர் நேற்று 8-ஆவது நாளாக நீடித்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. பல அடுக்கு மாடி வழக்கங்கள் தரைமட்டமாகின.
இந்நிலையில், இஸ்ரேலின் மத்திய பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை குறிவைத்து ஈரான் கடந்த 20-ஆம் தேதி கிளஸ்டர் குண்டுகளை வீசியதாக, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்தது.
சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கொத்து குண்டுகளை இஸ்ரேல் மீது ஈரான் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ஈரான் வீசிய கொத்து குண்டுகளால், இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைபா, டான் மாவட்டங்கள் உட்பட பல பகுதிகள் மீது ஈரான் நேற்று சரமாரியாக ஏவுகணைகளை வீசியது.
மைக்ரோசாஃப்ட் அலுவலகம் சேதம்:
சைரன் ஒலி எழுப்பியதும் மக்கள் பதுங்கு குழிகளிலும், வணிக வளாகங்களின் கார் பார்க்கிங் பகுதிகளிலும் சென்று பதுங்கினர். ஈரான் வீசிய ஏவுகணைகள் பலகட்டிடங்கள் மீது விழுந்து வெடித்தன.
பீர் சேவா நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலக கட்டிடம் மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்ததில், பலர் காயம் அடைந்தனர். இரு நாடுகள் இடையே பதற்றத்தை தணிக்கும் விதமாக, ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராகசிக்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm