
செய்திகள் உலகம்
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
வாஷிங்டன்:
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுதங்களைத் தயாரிக்க இறுதிக் கட்டத்தில் ஈரான் உள்ளதாக கூறி இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையி்ல ஈரான சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். ஆனால் சரண் அடையும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அமெரிக்கா போரில் களமிறங்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதலை இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறைதுணை அமைச்சர் செர்ஜி ரயாப்கோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர்தொடுத்தால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ஈரான், இஸ்ரேல் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த சமரச பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am