செய்திகள் மலேசியா
எரிபொருள் குழாயில் கோளாறு: 87,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை ஹோண்டா நிறுவனம் திரும்ப பெறவுள்ளது
கோலாலம்பூர்:
எரிபொருள் குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில் 87,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஹோண்டா மலேசியா நிறுவனம் திரும்ப பெறவுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிபொருள் குழாய்யை மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Accord (model tahun: 2013 – 2017), BR-V (2017 – 2018), City (2014 – 2019), City (Hybrid) (2018, 2019), Civic (2017, 2018), CR-V (2018 – 2020), HR-V (2015 – 2018), Jazz (2015 – 2020), Jazz (Hybrid) (2018) dan Odyssey (2017 – 2019) ஆகிய ஹோண்டா ரக கார்களில் எரிபொருள் குழாயில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோளாறு ஏற்பட்டுள்ள அக்குழாயில் நீண்ட நேரம் எரிப்பொருள் இருக்கும் போது அக்குழாய் விரிவடைந்து வாகனத்தை இயக்குவதில் சிக்கலை எதிர்நோக்க கூடும்.
அதுமட்டுமல்லாமல், வாகனம் ஓட்டும்போது இயந்திரம் செயலிழந்து போகும் நிலையும் உருவாகலாம் என்று ஹோண்டா நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Jazz, City, Civic, Accord, BR-V, HR-V, CR-V, Odyssey ஆகிய 84,073 ஹோண்டா ரக கார்கள் திரும்பப் பெறவுள்ளன.
மொத்தம் 3,417 Civic, CR-V ரக கார்கள் உயர் அழுத்த எரிபொருள் குழாய் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கார்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு கடிதங்கள் அனுப்பப்படும் என்று என்று ஹோண்டா தெரிவித்துள்ளது,
வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனம் ஹோண்டா டச் செயலி மூலம் திரும்பப் பெறுதலில் ஈடுபட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்கலாம்.
எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களும், எரிபொருள் குழாயை மாற்றுவதற்கான அறிவிப்பு கிடைத்தவுடன் ஹொண்டா வாகன சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கான முழு செலவையும் ஹோண்டா நிறுவனம் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 8:24 pm
தவறு என்றால் தவறு தான்; மத உணர்வுகளில் விளையாட வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
March 3, 2026, 8:23 pm
சமூக பணிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் ஆலயங்கள் மாணவர்களுக்கு இலவச டியூசன் வகுப்பு
March 3, 2026, 3:31 pm
பிலிப்பைன்ஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து: மலேசியர்கள் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்
March 3, 2026, 3:30 pm
அசாம் பாக்கி விவகாரம் தொடர்பான விசாரணை; செயல்முறை பின்பற்றப்படுகிறது: பிரதமர்
March 3, 2026, 3:29 pm
சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறார்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்யவில்லை: டத்தோ குமார்
March 3, 2026, 3:28 pm
பள்ளிவாசல் நிதி திருட்டு; 3 பேருக்கு 6 மாத சிறைத்தண்டனை, 4,000 ரிங்கிட் அபராதம்
March 3, 2026, 1:58 pm
பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் காயம்
March 3, 2026, 1:57 pm
அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இந்திய மாணவர்களுக்கு பியோன் மலேசியா வழிகாட்டுகிறது
March 3, 2026, 1:55 pm
