நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்

சென்னை: 

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்​வில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார். 

தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 6,600 எம்​பிபிஎஸ் இடங்​கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்​ளன.

இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 494 எம்​பிபிஎஸ் இடங்​கள், 119 பிடிஎஸ் இடங்​கள் வழங்​கப்படுகின்​றன. இந்​நிலை​யில், சிறப்பு பிரிவு (மாற்​றுத்​திற​னாளி, முன்​னாள் ராணுவ வீரர்​களின் வாரிசு, விளை​யாட்டு வீரர்) சிறப்பு பிரிவு கலந்​தாய்வு மற்​றும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டு இடங்​களுக்கு அரசு பள்ளி மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாக நேற்று சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை வளாகத்​தில் நடந்​தது.
 
இதில் தேர்​வான மாணவ, மாணவி​களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்கினார். 

இதன்​படி 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் விவ​சா​யி, கூலி தொழிலாளி உட்பட ஏழை குடும்​பத்தை சேர்ந்த 613 அரசு பள்ளி மாணவர்​கள் மருத்​துவ படிப்​பில் சேர்ந்​துள்​ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset