நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பேராக்கில் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு கபடி போட்டி

ஈப்போ:

ஏழாவது ஆண்டாக பேராக் மாநில இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான  ஆண்கள் மற் றும் பெண்கள் என இரு பிரிவுக்களுக்கான கபடி போட்டியும் அதன் பயிலரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும், பேராக் மாநில இளைஞர் மேம்பாட்டு இயக்க தலைவருமான கோ.சண்முகவேலு கூறினார்.

இவ்வாண்டும் இந்த கபடி போட்டி வருகின்ற 14.6.2025( சனிக்கிழமை), ஈப்போ ஸ்டேடியம் இந்திரா மூலியாயில் காலை மணி 8.30 க்கு தொடங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பேராக் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து இடைநிலைப்பள்ளியின் மாணவர்கள் கலந்துக் கொள்ளும் வகையில் இலவச பேருந்து வசதிகள் செய்து தரப்படுகிறது. அத்துடன், அனைவருக்கும் மதிய உணவும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஆகவே, நமது பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாட்டை இளைஞர்களிடையே அறிமுகப் படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் பேராக் மாநிலத்தில் பயிலும் படிவம் 5 வரையிலான இடைநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கெடுப்பதற்கு விரைந்து பதிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தொடர்புக்கு: கோ.சண்முகவேலு( 019-5750121); ம.சரவணன்(019-5727272).

கடந்தாண்டு இப்போட்டியில் 33 குழுக்கள் பங்கெடுத்தன. இவ்வாண்டு சுமார் 40 குழுக்கள் பங்கெடுக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இடைநிலைப்பள்ளியில் பணியாற்றும் இந்திய ஆசிரியர்கள் பொறுப்பேற்று இம்மாணவர்களை தயார் செய்து போட்டிக்கு அழைத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் ஏற்பாடு் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

-ஆர். பாலசந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset