நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மனித இயந்திரங்களால் மனிதர்களின் வேலை பறிபோகாது 

பெய்ஜிங்:

சீனாவின் மனித இயந்திரங்களால் மனிதர்கள் வேலையை இழக்கமாட்டார்கள் என்று பெய்ஜிங் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான துணை இயக்குநர் லியாங் லியாங் தெரிவித்துள்ளார்.

பெரிய அளவில் வேலையின்மையும் ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டார். 

மனித இயந்திரங்கள் செயல்திறனை அதிகரித்து ஆபத்தான சூழல்களில் வேலை செய்யும் ஆற்றல்மிக்கவை என்று அவர் தெரிவித்தார். 

மனிதர்கள் செய்ய விரும்பாத வேலைகளை இயந்திரங்கள் ஏற்றுக்கொள்ளும் என்று லியாங் குறிப்பிட்டார். 

இரவு நேரத்தில் மனிதர்கள் ஓய்வெடுக்கும் போது இயந்திரங்கள் வேலையைத் தொடரலாம்.

எதிர்கால வளர்ச்சி அதை நோக்கியே செல்கிறது என்று செய்தியாளர்களிடம் லியாங் தெரிவித்தார்.

சீனாவில் மனித இயந்திரங்களைத் தயாரிக்கும் துறை விரைவாக வளர்கிறது.

மனித இயந்திரங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset