
செய்திகள் தமிழ் தொடர்புகள்
நடுவானில் மலேசிய பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
சென்னை:
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அனைத்துலக விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 188 பயணிகளுடன் நள்ளிரவு வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியரான சிவசுப்பிரமணியம் சோமு (65) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தில் இருந்த பணிப் பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவித்து தயார் நிலையில் இருக்க செய்தனர்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதும், உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால், பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து பயணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:50 am
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ஷியா காஜி உள்ளிட்டோர் கைது
June 20, 2025, 3:39 pm
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
June 20, 2025, 7:14 am
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 19, 2025, 7:30 pm
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
June 19, 2025, 10:21 am
தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
June 17, 2025, 2:38 pm
சிறுவன் கடத்தல்: நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட எடிஜிபி ஜெயராம்
June 16, 2025, 8:49 am
குணா குகையில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வைரலாகும் காணொலி
June 15, 2025, 5:02 pm