
செய்திகள் தமிழ் தொடர்புகள்
நடுவானில் மலேசிய பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
சென்னை:
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அனைத்துலக விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 188 பயணிகளுடன் நள்ளிரவு வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியரான சிவசுப்பிரமணியம் சோமு (65) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தில் இருந்த பணிப் பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவித்து தயார் நிலையில் இருக்க செய்தனர்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதும், உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால், பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து பயணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm