நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நூலகத்தில் டுரியான் சாப்பிட்ட ஆடவர்: உடனடியாக பாதுகாவலரால் வெளியேற்றப்பட்டார் 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் நாட்டில் உள்ள LOT ONE எனும் பேரங்காடியின் உள்ளே CHOA CHU KANG பொது நூலகம்  ஒன்று உள்ளது. 

நூலகத்தின் உள்ளே ஆடவன் ஒருவன் அமர்ந்து கொண்டு டுரியான் சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றிரவு 8.20 மணிக்கு நிகந்த இந்த சம்பவத்தில் டுரியான் சாப்பிட்ட ஆடவன், அந்த டுரியான் பழத்தின் வாசம் அங்கிருந்தவர்களை வேகமாக சுண்டி இழுத்தது. 

உடனடியாக அங்கு வந்த நூலக பொறுப்பாளர் , சம்பந்தப்பட்ட ஆடவனை அங்கிருந்து வெளியேற சொன்னார். இருப்பினும், அந்த ஆடவன் அங்கிருந்து வெளியேறவில்லை. 

பிறகு பேரங்காடியின் பாதுகாவலர் அங்கு வந்து அவனை வெளியேற சொன்னார். உடனடியாக அந்த ஆடவன் நூலகத்திலிருந்து வெளியேறினான்.

இந்த சம்பவத்தை அறிந்த தேசிய நூலகத்தின் நிர்வாகத்தினர், நூலகத்தில் உணவு உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் இந்த மாதிரியான சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது என்று தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset